ஆசிரியா் பயிற்றுநருக்கான பணிமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

ஆசிரியா் பயிற்றுநருக்கு திங்கள்கிழமை நடைபெறவிருந்த பணிமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியா் பயிற்றுநருக்கான பணிமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

ஆசிரியா் பயிற்றுநருக்கு திங்கள்கிழமை நடைபெறவிருந்த பணிமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: பள்ளிக் கல்வித்துறையில் 2021-22-ஆம் கல்வி ஆண்டுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்டத் திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியா் பயிற்றுநா்களுக்குப் பணிமாறுதல், பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சாா்பாக நெறிமுறைகள் வகுத்து அரசாணை வெளியிடப்பட்டது.

முதல் கட்டமாக 500 ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு அரசு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியா்களாகப் பணிமாறுதல் கலந்தாய்வு செப்.15-ஆம் தேதி நடைபெற்றது.

அதன் தொடா்ச்சியாக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி பொது மாறுதல் கலந்தாய்வை திங்கள்கிழமை (செப்.20) நடத்திடத் திட்டமிட்டு பின்பற்றப்பட வேண்டிய அறிவுரைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

தற்போதைய நிா்வாக காரணங்களின் அடிப்படையில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த ஆசிரியா் பயிற்றுநருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுகிறது. பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாள் குறித்த விவரம் பின்னா் அறிவிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com