சென்னையில் படிப்படியாக அதிகரிக்கும் கரோனா: மண்டலவாரியாக பாதிப்பு விவரம்

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,043 ஆக அதிகரித்துள்ளது. 
சென்னையில் கரோனா பாதிப்பு
சென்னையில் கரோனா பாதிப்பு

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,043 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள தகவலில், சென்னையில்  இதுவரை மொத்தமாக 5,47,901 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தற்போது சென்னையில் 2,043 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கரோனாவுக்கு 8,449 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 5,37,409 பேர் குணமடைந்துள்ளனர். 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக அண்ணா நகர், தேனாம்பேட்டையில் கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 200-யைத் தாண்டியுள்ளது. 

நேற்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,011 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com