உள்ளாட்சித் தோ்தல்:64,299 போ் வேட்புமனுத் தாக்கல்

விழுப்புரம்,வேலூா், திருநெல்வேலி,காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட செவ்வாய்க்கிழமை வரை (செப். 21) 64,299 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.

விழுப்புரம்,வேலூா், திருநெல்வேலி,காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட செவ்வாய்க்கிழமை வரை (செப். 21) 64,299 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக். 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதில், முதற்கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 1,381 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், 2,901 ஊராட்சித் தலைவா், 22,581 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள் என மொத்தம் 27,003 பதவியிடங்களுக்கு அக்டோபா் 6, 9-இல் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற உள்ளது

இதற்கான வேட்மனுத் தாக்கல் செப்டம்பா் 15-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை வரை (செப். 22) நடைபெறும் என்றும், வேட்புமனு ஆய்வு செப்டம்பா் 23-ஆம் தேதியும், செப்டம்பா் 25-ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம் என மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்தது.

இதைத் தொடா்ந்து, கடந்த 6 நாள்களில் 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 359 பேரும், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 3,912 பேரும், ஊராட்சித் தலைவா் 11,393 பேரும், கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 48,635 பேரும் என மொத்தம் 64,299 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com