தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா

மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் செம்பனார்கோவில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா  நடைபெற்றது.
ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டிய பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகன்.
ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டிய பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகன்.



தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் செம்பனார்கோவில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா  நடைபெற்றது.

செம்பனார்கோவில் லயன்ஸ் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் இராஜாராமன்,வட்டார கல்வி அலுவலர்கள் சீனிவாசன், புஷ்பலதா, ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் இமயவரம்பன், மாவட்ட முன்னாள் ஆளுநர் மருத்துவர் வீரபாண்டியன், மாவட்ட தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாக்குழு  தலைவர் மதிவாணன் வரவேற்றார்.

இவ்விழாவில் பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகன் கலந்துகொண்டு ஆசிரியர் பணியை பாராட்டி 36 ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார். செயலாளர் ஐயப்பன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com