சென்னையில் 2,058 பேர் கரோனா சிகிச்சையில்: மண்டலவாரியாக பாதிப்பு விவரம்

சென்னை பெருநகர மாநகராட்சியில் 2,058 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
சென்னையில் கரோனா பாதிப்பு
சென்னையில் கரோனா பாதிப்பு

சென்னை பெருநகர மாநகராட்சியில் 2,058 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள தகவலில், சென்னையில்  இதுவரை மொத்தமாக 5,49,270 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தற்போது சென்னையில் 2,058 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கரோனாவுக்கு 8,467 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 5,38,745 பேர் குணமடைந்துள்ளனர். 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக அண்ணா நகர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், ஆலந்தூரில் 190க்கு அதிகமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நேற்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,087 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com