வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு வருகிறார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் தொடங்கவுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கடந்த வாரம் முதல்வர் ஆலோசனை நடத்தியிருந்தார்.
இதையடுத்து, வடகிழக்கு பருவமழையிலிருந்து சேதங்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் ஈவெரா பெரியார் சாலையில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்புப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.