காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சாலவாக்கம் பஜாரில் மளிகைக்கடை நடத்தி வந்தவரிடம் ரூ.1.70லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக புதன்கிழமை இருவரை கைது செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் பஜாரில் மளிகைக்கடை நடத்தி வந்தவர் கானாராம்(40). இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான குட்காவும் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசராணையில் கடையில் ரூ.1.70 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் பான்மசாலா பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிக்க | திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கம் பறிமுதல்
இது சம்பந்தமாக மளிகைக்கடை நடத்தி வந்த கானாராம்(40) மற்றும் கடையில் இருந்த சுத்ராராம்(22) ஆகிய இருவரையும் வழக்குப்பதிவு செய்து சாலவாக்கம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.