கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் ‌தண்டனை: திருச்சி ‌நீதிமன்றம் அதிரடி ‌தீர்ப்பு!

திருச்சியில் கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் ‌தண்டனை அளித்து திருச்சி ‌நீதிமன்றம் அதிரடி ‌தீர்ப்பு வழங்கியுள்ளது. 
திருச்சி நீதிமன்றம்
திருச்சி நீதிமன்றம்

திருச்சி: திருச்சியில் கடந்த 2013ஆம் ஆண்டு எடமலைப்பட்டி புதூர் பகுதியில் சுப்பன் என்கிற பாலசுப்பிரமணியன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 10 பேர் குற்றவாளிகளாகக் கைதாகினர்.

தற்போது இந்த வழக்கின் விசாரணை திருச்சி 3வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதற்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

இதில் ராஜமாணிக்கம், வடிவேலு, சங்கர், மணிவேல், தர்மன், நீலமேகம் ,பிரபு, சம்பத், மோகன்ராஜ், ஜம்புலிங்கம் ஆகிய 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தங்கவேலு தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com