அக்டோபர் 1 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி என்ற தகவல் உண்மையில்லை என தென்காசி மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வருகிற அக்டோபர் 1 முதல் குளிக்க அனுமதி என கடந்த ஒரு சில தினங்களாக தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து தென்காசி மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், அக்டோபர் 1 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி என்ற தகவல் உண்மையில்லை. அதனை நம்பி யாரும் வர வேண்டாம்.
குற்றால அருவிகளில் குளிப்பதற்காக தடை தொடருகிறது. அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படும்போது முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.