குற்றால அருவிகளில் குளிக்க அனுமதியா? - மாவட்ட நிர்வாகம் விளக்கம்

அக்டோபர் 1 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி என்ற தகவல் உண்மையில்லை என தென்காசி மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. 
ஐந்தருவி(கோப்புப்படம்)
ஐந்தருவி(கோப்புப்படம்)

அக்டோபர் 1 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி என்ற தகவல் உண்மையில்லை என தென்காசி மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. 

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வருகிற அக்டோபர் 1 முதல் குளிக்க அனுமதி என கடந்த ஒரு சில தினங்களாக தகவல் பரவி வருகிறது. 

இந்நிலையில், இதுகுறித்து தென்காசி மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், அக்டோபர் 1 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி என்ற தகவல் உண்மையில்லை. அதனை நம்பி யாரும் வர வேண்டாம். 

குற்றால அருவிகளில் குளிப்பதற்காக தடை தொடருகிறது. அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படும்போது முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com