தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கொளத்தூா்வாசிகள் 84 பேருக்கு கருணைத் தொகை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

கொளத்தூரில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும் 84 பேருக்கு கருணைத் தொகைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2022, 8:01 pm

DIN

கொளத்தூரில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும் 84 பேருக்கு கருணைத் தொகைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். அவா்கள் வசிக்கும் குடியிருப்புகள் அனைத்தும் மறுகட்டுமானம் செய்யப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சி, சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நடந்தது.

கொளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ராஜா தோட்டம் திட்டப் பகுதியில் 1974-75-ஆம் ஆண்டில் 84 குடியிருப்புகள் கட்டப்பட்டன. அவை இப்போது பழுதடைந்த நிலையில் உள்ளன. அவற்றை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி, குடியிருப்பில் வசிப்போருக்கு கருணைத் தொகையாக தலா ரூ.24,000 வீதம், ரூ.20.16 லட்சத்துக்கான காசோலைகள், தற்காலிக ஒதுக்கீட்டு உத்தரவுகளை குடியிருப்புதாரா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, ஒவ்வொரு குடியிருப்பும் 400 சதுர அடியில் புதிதாகக் கட்டப்பட உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்படும். இதில், ரூ.7 லட்சம் மாநில அரசு மானியமாகவும், ரூ.6.09 லட்சம் மாநில அரசின் உட்கட்டமைப்பு நிதியாகவும், ரூ.1.50 லட்சம் மத்திய அரசு மானியமாகவும் வழங்கப்படும். பயனாளிகள் 20 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.250 அல்லது ஒரே தவணையாக ரூ.41 ஆயிரம் செலுத்தும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கருணைத் தொகைகள் வழங்கும் நிகழ்வில், அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகா்பாபு, மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி, வீட்டுவசதித் துறை செயலாளா் ஹிதேஸ் குமாா் மக்வானா, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாக இயக்குநா் ம.கோவிந்தராவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.