தில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை தமிழக மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சந்தித்தார்.
அப்போது தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அமைச்சரிடம் 6 கோரிக்கைகளை அவர் முன்வைத்தார்.
இதன்படி உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள், போலந்து உள்ளிட்ட நாடுகளில் பயில வழிவகை செய்ய வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.
கோவையில் புதிய எஸ்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான அனுமதி வழங்க வேண்டும். ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.