தமிழ்நாட்டில் 1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 6-9ஆம் வகுப்புகளுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும். 9ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் மே 2 முதல் 4 வரை நடைபெறும்.
இதையும் படிக்க- மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த சொல்லவே இல்லை: கே.அண்ணாமலை
நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் மே 13ஆம் தேதி ஆகும். 2022-23ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜுன் 13ஆம் தேதி தொடங்கும். அதேசமயம் 11ஆம் வகுப்புக்கு மட்டும் ஜுன் 24ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.