சென்னை: ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், ஆயுள் தண்டனை பெற்ற கைதியை முன்கூட்டியே விடுதலை செய்யும்படி ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவை ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற யாசுதீனை விடுவிக்க மறுத்துவிட்ட தமிழக அரசின் உத்தரவில் தலையிட முடியாது என்றும், ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.