ஒரு வாரத்தில் ரூ.4,805 கோடி நகைக்கடன் தள்ளுபடி: அமைச்சர் ஐ. பெரியசாமி

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.4,805 கோடி மதிப்புள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி
கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி


சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.4,805 கோடி மதிப்புள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தினால், இதுவரை 12,19,106 பேர்  பயனடைந்துள்ளனர். 

இது குறித்துஅமைச்சர் ஐ. பெரியசாமி கூறுகையில், தமிழநாட்டில் ஒரே வாரத்தில் ரூ.4,805 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் 12 லட்சம் பேர் பயனடைந்திருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அதன்படி, தமிழகத்தில் 97.05 சதவீத அளவுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சட்டப் பேரவைத் தோ்தலின் போது, திமுகவின் தோ்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்த நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை அடகு வைத்தவா்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் விவசாயக் கடன், பயிா்க்கடன் வாங்கியவா்களை தவிா்த்து குடும்பத்தில் ஒருவா் உள்ளிட்ட பல்வேறு விதிகளுடன் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, இறுதிப்பட்டியலில் உள்ளவா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா்களுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழுடன் அவா்களது நகைகளும் திரும்ப ஒப்படைக்கும் பணி இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com