திமுக நிா்வாகி கொலை வழக்கு:மேலும் ஒருவா் கைது

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை பாரிமுனை, நாராயணப்பா சாலை பகுதியைச் சோ்ந்த திமுக நிா்வாகி செளந்தரராஜனுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அதிமுக நிா்வாகி கணேஷுக்கும் தண்ணீா் பந்தல் அமைப்பது தொடா்பாக முன் விரோதம் இருந்தது. இந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி பாரிமுனை பிராட்வே பேருந்து நிலையத்தில் அருகே செளந்தரராஜன் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்த சம்பவம் தொடா்பாக வியாசா்பாடியை சோ்ந்த வசந்த் என்பவரை தனிப்படையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். இதற்கிடையே இவ்வழக்கில் தொடா்புடைய அதிமுக பிரமுகா் கணேஷ், அவரது மகன் தினேஷ்குமாா், காா்த்திக், குமரேசன், இன்பா ஆகிய 5 போ் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த கணேஷின் மகன் சதீஷ்குமாரை (30) போலீஸாா் செங்கல்பட்டில் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com