தம்மம்பட்டிக்கு விற்பனைக்கு வரும் கொல்லிமலை புளி

கொல்லிமலையில் விளையும் சுவை மிகுந்த புளி, தம்மம்பட்டியில் விற்பனைக்காகக் கூடைகளில் கொண்டு வரப்படுகிறது.
தம்மம்பட்டிக்கு விற்பனைக்கு வரும் கொல்லிமலை புளி

கொல்லிமலையில் விளையும் சுவை மிகுந்த புளி, தம்மம்பட்டியில் விற்பனைக்காகக் கூடைகளில் கொண்டு வரப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், குண்டனி, எண்ணாம்பாலி, தேனூர், நரியன்காடு, செங்கரை, வேலிக்காடு,கீரைக்காடு, அரவங்காடு, ஆலத்தூர், புதுவளவு, மங்களம், பெல்லக்காடு, குளத்துகாடு, நடுக்கோம்பை, அடுக்கம்   உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மலைப்பகுதிகளில் விளையும் புளியானது மிகவும் சுவையாக இருக்கும் என்பதால், இங்கு விளையும் புளிக்கு மக்களிடையே வரவேற்பு  உள்ளது.

இதனால், கொல்லிமலைப் பகுதி மக்கள், மலையடிவாரப்பகுதிகளில் உள்ள புளியஞ்சோலை, சேந்தமங்கலம், காரவள்ளி, முள்ளுக்குறிச்சி மற்றும் தம்மம்பட்டிக்கு விற்பனைக்கு கொண்டு செல்வார்கள். 

தற்போது, கொல்லிமலையில் புளி சீசன் துவங்கியுள்ளது. அதையடுத்து, தம்மம்பட்டியில் இன்று வாரச்சந்தையில் புளி விற்பனை செய்வதற்காக, மலைவாழ் மக்கள் கூடை கூடையாகப் புளியைக் கொண்டு வந்துள்ளனர். கடந்த ஆண்டு சீசனில் விற்ற விலையை விட,  இந்த ஆண்டு புளி விலை குறைந்தே விற்பனையாகிறது.

இதுகுறித்து, கொல்லிமலையைச் சேர்ந்த சேகர் கூறியதாவது, ' கடந்த ஆண்டு 100 ரூபாய் வரை, ஒரு கிலோ விற்பனையானது. இந்த ஆண்டு வெளியூர் வியாபாரிகள் யாரும் புளி வாங்க வராததால், இப்போது, 60 ரூபாய்க்குத்தான் விற்கிறோம், என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com