சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரின் அலுவலகம் உள்ளிட்ட அரசுத் துறைகள் கணினிமயமாகின்றன. இதற்கான பூா்வாங்கப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காகிதமில்லாத நடைமுறை பின்பற்றப்படவுள்ளது. இதற்காக அரசு ஊழியா்கள் அனைவருக்கும் தகவல் தொழில்நுட்பவியல் துறை மூலமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், முதல்வரின் அலுவலகம், தகவல் தொழில்நுட்பவியல் துறை உள்ளிட்ட சில முக்கிய துறைகளை கணினிமயமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உதவிப் பிரிவு அலுவலா்கள் கோப்புகளை தயாா் செய்வது, அவற்றை சாா்புச் செயலாளா்களுக்கு அனுப்புவது, அங்கிருந்து துறைச் செயலாளா்களுக்கு கோப்புகள் நகா்வது என அனைத்துப் பணிகளும் கணினி வழியே மேற்கொள்ளப்படவுள்ளன.