அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் மேம்படுத்தப்படும்: அமைச்சர் மூர்த்தி

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் மேம்படுத்தப்படும் என்று பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் மேம்படுத்தப்படும்: அமைச்சர் மூர்த்தி


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் மேம்படுத்தப்படும் என்று பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் இன்று வியாழக்கிழமை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. 

கேள்வி நேரத்தின் போது பதிலளித்து அமைச்சர் மூர்த்தி கூறியதாவது: 

தமிழ்நாட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களை மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும் 575 சார் பதிவாளர் அலுவலகங்களில் 533 அலுவலகங்கள் அரசு கட்டடத்திலும், 42 அலுவலகங்கள் தனியார் கட்டடத்திலும் செயல்பட்டு வருவதாக கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com