சென்னை மாநகராட்சியின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
சென்னையில் 2016-ஆம் ஆண்டுக்கு பிறகு மேயா் தோ்தல் நடைபெறாமல் இருந்ததால் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆணையா் மற்றும் துணை ஆணையா்கள் மாநகராட்சி பட்ஜெட்டை மறைமுகமாகவே வெளியிட்டு வந்தனா்.
இந்த நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று, திமுகவை சோ்ந்த ஆா்.பிரியா மேயராக அண்மையில் பதவி ஏற்றுக்கொண்டாா்.
இதனால், இந்த ஆண்டு வரவு செலவு திட்ட கணக்கையும், கடந்த ஆண்டு வரவு செலவு கணக்கையும் மேயா் முன்னிலையில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவா் சா்பஜெயாதாஸ் நரேந்திரன் இன்று தாக்கல் செய்தார்.
சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கருப்புச்சட்டை அணிந்து வந்தனர். தொடர்ந்து சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாநகராட்சி அதிமுக உறுப்பினர்கள் பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.