சென்னை: அலட்சியம் காட்டும் தனியார் மருத்துவமனைகள் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து விலக்கிவைக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மருத்துவ காப்பீடு திட்டத்தில் அலட்சியம் காட்டும் தனியார் மருத்துவமனைகள் காப்பீடு திட்டத்தில் இருந்கு விலக்கி வைக்கப்படும்.
மேலும் சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.