செங்கல்பட்டில் ஸ்ரீ நாகாத்தம்மன் கோயில் அஷ்ட பந்தன  மகா கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு பெரிய நத்தம் நாகாத்தம்மன் தெருவில் உள்ள ஸ்ரீ நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டில் ஸ்ரீ நாகாத்தம்மன் கோயில் அஷ்ட பந்தன  மகா கும்பாபிஷேகம்


செங்கல்பட்டு: செங்கல்பட்டு பெரிய நத்தம் நாகாத்தம்மன் தெருவில் உள்ள ஸ்ரீ நாகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு பெரிய நத்தம் நாகாத்தம்மன் தெருவில் அமைந்துள்ள பழமையான நாகாத்தம்மன் கோயில் உள்ளது இக்கோயில் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய விழாக் குழுவினர்கள் தீர்மானத்து கோயில் திருப்பணி நடைபெற்று வந்தன .

இந்த பணி முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. செங்கல்பட்டு நகரம் பெரிய நத்தம் கிராமத்திலுள்ள ஸ்ரீ நாகாத்தம்மன் கோயிலில் சாஸ்திர முறைப்படி பாலவிநாயகர் பாலமுருகன் இந்திராணி மகேஸ்வரி சப்த கன்னியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுடன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 150 மணி நேரம் சாதனை பெற்றார் செங்கல்பட்டு விநாயகா நாட்டியாலயா ராகவனின் மீனாட்சி ராகவன் குழுவினர் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதையடுத்து திங்கட்கிழமை கோ பூஜை மங்கல இசை விக்னேஸ்வர பூஜை புண்யாக வாசனம் கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் வாஸ்து சாந்தி, பிரவேச பலி ,அங்குரார்ப்பணம் கும்ப அலங்காரம் முதல் கால பூஜைகள் ஹோமங்கள் பூர்ணாஹுதி மகா தீபாராதனை  பிரசாதம் வழங்குதல் நடைப்பெற்றது. செவ்வாய்க்கிழமை விசேஷ சந்தி ,சூரிய பூஜை, துவார பூஜை, புதிய பிம்பங்களும் உள்ளிட்ட பூஜைகளுடன் இரண்டாம் கால பூஜை ஹோமங்கள் பூர்ணாஹுதி மகாதீபாராதனை விக்னேஸ்வர பூஜை மூன்றாம் காலம் பூஜை புதிய பிம்பங்கள் பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றது. 

புதிய விமான கோபுரங்களுக்கு சிறப்பு பூஜைகளுடன நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதன்கிழமை மங்கல இசை நான்காம் கால பூஜை ஹோமங்கள் நாடி சந்தானம் தத்வார்ச்சனை ஸபர்சாஹுதி மகா பூர்ணாஹுதி மகா தீபாராதனையுடன் கலச புறப்பாடு புதிய விமான கோபுரங்களுக்கு சிறப்பு பூஜைகளுடன நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 ஸ்ரீ பக்தி ஞான பீடத்தின் நிறுவனர் குகானந்தபூரி ஸ்வாமி கலந்து கொண்டார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கும்பாபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. 

சிவஸ்ரீ எஸ் குமார் குருக்கள் தலைமையில் யாக பூஜைகள் செய்யப்பட்டது . விழாவிற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழாக்குழுவினர் நத்தம் கிராமத்தார்கள் மகளிர் ஆன்மீக குழுக்கள் மற்றும் பெரிய நோக்கம் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com