‘ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்’: மார்க்சிஸ்ட் கம்யூ. அறிவிப்பு

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்று மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்று மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகள், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ. செயலாளர் வெளிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் குரலையும், தமிழக மக்களின் கோரிக்கைகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாக செயல்பட தொடர்ச்சியாக ஆளுநர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

“மேலும்   தமிழக சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா உள்ளிட்டவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக சட்டப்பேரவையின் மாண்பை சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள், துணைவேந்தர் நியமன பிரச்னை, இந்தியாவின் பன்மைத்துவத்தை நிராகரிக்கும் உரை போன்ற நடவடிக்கைகளால் தமிழக மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் எங்களது கட்சியின் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட யாரும் பங்கேற்பதிலை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முடிவு செய்துள்ளது.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com