இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 19 பேரை நிபந்தனையுடன் விடுவிக்க அந்நாட்டின் ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம், புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கைதான மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிக்க- பஞ்சாபில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
தமிழக மீனவர்கள் 19 பேரை நிபந்தனையுடன் விடுவிக்க அந்நாட்டின் ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் இந்திய துணை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு ஓரிரு நாளில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.