உள்ளாட்சிப் பிரதிநிதிகளை நம்பி அரசின் திட்டங்கள் முழுமையாக ஒப்படைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான நிர்வாகப் பயிற்சி நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மக்களுக்கான பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், மக்களோடு இருந்ததால்தான், 2வது முறையாக சென்னை மாநகராட்சி மேயராகத் தேர்வு செய்யப்பட்டேன் என்பதைக் குறிப்பிட்ட அவர்,
உள்ளாட்சிப் பிரதிநிதிகளை நம்பி அரசின் திட்டங்கள் முழுமையாக ஒப்படைக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.