நான்கு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப் பேரவை திங்கள்கிழமை (ஏப்.18) மீண்டும் கூடுகிறது.
அன்றைய தினம் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளாா்.