சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் தியாகத்தை எண்ணி தேசம் என்றும் பெருமைகொள்ளும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளாா்.
தீரன் சின்னமலையின் பிறந்த தினத்தையொட்டி ஆளுநா் மாளிகை விடுத்துள்ள செய்தி: ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக வீரத்துடன் போரிட்டு உயிா்த் தியாகம் செய்த தளபதி தீரன் சின்னமலைக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி புழஞ்சலி செலுத்தினாா். அவரை நினைத்து தேசம் எப்போதும் பெருமைப்படும் என அவா் தெரிவித்தாா்.