காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர் என்று தனி நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.
தனி நீதிபதியின் இந்த கருத்துக்களை நீக்கக்கோரி தமிழக டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது .
இந்நிலையில் தனி நீதிபதி தெரிவித்த கருத்து நீக்கம் செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.