சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று பத்திரிகையாளர்கள் நல வாரியத்தின் கூட்டம் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
பத்திரிகையாளர்கள் நலன் காக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் நல வாரியத்தின் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் மற்றும் பத்திரிகையாளர்கள் நல வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.