சென்னை: தமிழகத்தில் காலியாகயிருக்கும் 7,382 பணியிடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்தார்.
மேலும், குரூப் 4 தேர்வுக்கு மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் மூன்று நாட்களே இருப்பது குறிப்பிடத்தக்கது.