மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யும் வகையில் ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த ஒரு வாரத்தில் பல வடமாநிலங்களில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை ஐஐடி-யில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ளது.
ஒமைக்ரான் காணமாக ஏற்பட்ட 3 ஆவது அலையின் தாக்கம் பெரும் அளவில் இல்லை.
தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கைகளால் கரோனா தொற்று, உயிரிழப்பு குறைந்துள்ளது. பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். கரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்.
தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் 91.5 சதவீதம் முதல் தவணை டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 74.75 சதவீதம் இரண்டாவது தவணை டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
41.656 சதவீதம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது.
தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசிபோடுவதை உறுதி செய்வது நம் முன் இருக்கும் பெரிய சவாலாக இருப்பதாகவும், கரோனா பரவிவரும் நிலையில் எந்த சூழ்நிலைலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.