மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 105.53 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,198 அடியாக குறைந்து உள்ளது. அமையின் நீர்மட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 105. 51 அடியாக இருந்த நிலையில், இன்று புதன்கிழமை காலை 105.53 அடியாக உயர்ந்துள்ளது .
நீர் இருப்பு 72.19 டிஎம்சியாக உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையிலிருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.