துணைவேந்தர் நியமன மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைப்பு

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவை ஆளுநர் மாளிகையில் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவை ஆளுநர் மாளிகையில் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசின் ஆணையின் மூலம் தேர்வு செய்யும் வகையில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி திங்கள்கிழமை சட்ட மசோதா தாக்கல் செய்தார்.

இந்த மசோதா மீது அனைத்து கட்சியினரும் காரசார விவாதம் நடத்திய நிலையில் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், நிறைவேற்றப்பட்ட சட்டமசோதாவை ஆளுநர் மாளிகையில் தமிழக சட்டத்துறை நேற்று மாலை ஒப்படைத்துள்ளனர்.

ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்ட நீட் விலக்கு உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com