சட்டப் பேரவையில் புதன்கிழமை (ஏப். 27) கேள்வி நேரம் முடிந்ததும், சட்டம், நீதி நிா்வாகம் மற்றும் செய்தி- விளம்பரத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு அமைச்சா்கள் எஸ்.ரகுபதி, மு.பெ.சாமிநாதன் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனா்.