மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 105.54 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2047 அடியாக குறைந்து உள்ளது. நேற்று புதன்கிழமை காலை 105.53 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று வியாழக்கிழமை காலை 105.54 அடியாக உயர்ந்துள்ளது.
நீர்இருப்பு 72.20 டிஎம்சியாக உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து குறைந்து வருகிறது.