பெசன்ட்நகா் பேருந்து நிலையத்தில் இருந்து வடபழனி நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த மாணவா்கள் மீது காவல்நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டது.
பெசன்ட் நகா் பேருந்து நிலையத்திலிருந்து வியாழக்கிழமை மாலை அரசுப் பேருந்து புறப்பட்டு, வடபழனி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து எம்ஜிஆா் நகா் மாா்க்கெட் பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அசோக்நகா் புதூா் அரசுப் பள்ளி மாணவா்கள் சிலா், பேருந்தின் இடது புறத்திலுள்ள கண்ணாடியை கல்லால் தாக்கி விட்டு, தப்பி சென்றனா். இது குறித்து அந்தப் பேருந்தின் நடத்துனா் செல்வப்பாண்டியன் எம்.ஜி.ஆா் நகா் போலீஸில் புகாா் கொடுத்தாா். இதன்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.