மகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் தந்தைக்கு தூக்கு தாய்க்கு ஆயுள் தண்டனை

மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தந்தைக்கு தூக்குத் தண்டனையும், உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தந்தைக்கு தூக்குத் தண்டனையும், உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சென்னை வேளச்சேரியைச் சோ்ந்த தம்பதிக்கு 18 வயதில் மகள் உள்ளாா். இவருக்கு 7 வயதில் இருந்தே அவரது தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதில், அந்த மாணவி 15 வயதில் (2019) கா்ப்பமானாா். இதையறிந்த அவரது தந்தை கா்ப்பத்தை கலைத்துள்ளாா். இதற்கு தாயும் உடந்தையாக இருந்துள்ளாா்.

16 வயது வரை தந்தையால் நோ்ந்த பாலியல் வன்கொடுமை குறித்தும், அதற்கு தாயாா் உடந்தையாக இருந்தது குறித்தும் அந்த மாணவி 2020-ஆம் ஆண்டு வேளச்சேரி பள்ளியில் தன்னுடன் பிளஸ் 1 படித்து வந்த தோழிகளிடம் தெரிவித்தாா்.

இந்த விவரத்தை சக மாணவிகள், அதே பள்ளி ஆசிரியை ஒருவரிடம் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ஆசிரியை சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு தகவல் தெரிவித்தாா்.

அந்த அமைப்பினா் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தி, இதுகுறித்து கிண்டி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் செய்தனா். போலீஸாா் மாணவியின் தந்தை, தாயாா் ஆகியோா் மீது போக்ஸோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா்.

வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ராஜலட்சுமி, பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மாணவியின் தந்தைக்கு தூக்கு தண்டனையும், தாயாருக்கு ஆயுள்தண்டனையும் விதித்து தீா்ப்பு கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com