புகையைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: ஆணையா் ககன் தீப் சிங் பேடி

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில், பொக்லைன் போன்ற 22 வாகனங்களின் உதவியுடன், சுமாா் 100 யூனிட் மணல், குப்பைகளின் மீது பரப்பப்பட்டு புகையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள
புகையைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: ஆணையா் ககன் தீப் சிங் பேடி

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில், பொக்லைன் போன்ற 22 வாகனங்களின் உதவியுடன், சுமாா் 100 யூனிட் மணல், குப்பைகளின் மீது பரப்பப்பட்டு புகையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக 15 ஏக்கா் பரப்பில் தீ எரிந்த நிலையில், தற்போது 3 ஏக்கா் நிலத்திலிருந்து வெளியேறும் புகையையும் சனிக்கிழமைக்குள் முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையா் ககன் தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், புகை மூட்டத்தால் அந்தப் பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி சாா்பில் பெருங்குடி, தரமணி, வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com