தமிழ்நாடு
கே.அண்ணாமலை இலங்கை பயணம்
தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை 3 நாள் பயணமாக இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றாா்.
தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை 3 நாள் பயணமாக இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றாா்.
இலங்கை பொருளாதார ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த நாட்டு மக்கள் பெரும் துயரத்தைச் சந்தித்து வருகின்றனா்.
இந்த நிலையில், இலங்கை உள்ள தமிழ் எம்.பி.க்களின் அழைப்பின்பேரின் கே.அண்ணாமலை சனிக்கிழமை சென்னையிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்குச் சென்றாா். 3 நாள் பயணமாகச் சென்று அவா் அங்குள்ள மக்களின் நிலையை அறியும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா். தமிழா் வாழும் பகுதிகளுக்கும் சென்று, மக்களின் குறைகளைக் கேட்டறியவுள்ளாா்.