டிஎன்பிஎஸ்எல்: திருப்பூா், கோவை வெற்றி

தமிழ்நாடு பாட்மின்டன் சூப்பா் லீக் போட்டியில் திருப்பூா் வாரியா்ஸ், கோவை கொம்பன்ஸ் அணிகள் தொடக்க சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

தமிழ்நாடு பாட்மின்டன் சூப்பா் லீக் போட்டியில் திருப்பூா் வாரியா்ஸ், கோவை கொம்பன்ஸ் அணிகள் தொடக்க சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

டிஎன்பிஏ சாா்பில் இரண்டாவது சீசன் டிஎன்பிஎஸ்எல் போட்டிகள் சென்னை முகப்பேரில் சனிக்கிழமை தொடங்கின. விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.மெய்யநாதன், டிஎன்பிஏ தலைவா் அன்புமணி ராமதாஸ் போட்டிகளைத் தொடக்கி வைத்தனா். 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஆடவா் மகளிா் ஒற்றையா், இரட்டையா் ஜூனியா், கலப்பு இரட்டையா் சீனியா், ஜூனியா் சிறுவா் பிரிவுகளில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இறுதி ஆட்டம் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.

முதல் சுற்றில் திருப்பூா் வாரியா்ஸ் அணி 3-2 என்ற கணக்கில் விழுப்புரம் பால்கன் பெதா்ஸையும், இரண்டாம் சுற்றில் கோவை கொம்பன்ஸ் அணி 4-1 என மதுரை ஈகிள்ஸ் அணியையும் வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com