சாலையில் நடந்துவந்த காட்டுயானை.. காரை தாக்கி சேதப்படுத்தியது

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இன்று காலை சாலையில் நடந்து வந்த காட்டு யானை, அங்கிருந்த கார் ஒன்றை தாக்கி சேதப்படுத்தியது.
காட்டுயானை சேதப்படுத்திய கார்
காட்டுயானை சேதப்படுத்திய கார்

கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இன்று காலை சாலையில் நடந்து வந்த காட்டு யானை, அங்கிருந்த கார் ஒன்றை தாக்கி சேதப்படுத்தியது.

கல்லிங்கரை -பாடந்தொரை நெடுஞ்சாலையில் நடந்துவந்த யானை சாலையோரம் நிறுத்தியிருந்த காரை தாக்கி சேதப்படுத்தியது. அந்த சம்பவத்தை பார்த்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பயந்து ஓடினர்.

ஆனால் இது எதையும் கண்டுகொள்ளாத யானை சாலையிலேயே நடந்து சென்றது. தகவலறிந்த வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டிவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com