கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இன்று காலை சாலையில் நடந்து வந்த காட்டு யானை, அங்கிருந்த கார் ஒன்றை தாக்கி சேதப்படுத்தியது.
கல்லிங்கரை -பாடந்தொரை நெடுஞ்சாலையில் நடந்துவந்த யானை சாலையோரம் நிறுத்தியிருந்த காரை தாக்கி சேதப்படுத்தியது. அந்த சம்பவத்தை பார்த்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பயந்து ஓடினர்.
ஆனால் இது எதையும் கண்டுகொள்ளாத யானை சாலையிலேயே நடந்து சென்றது. தகவலறிந்த வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டிவிட்டனர்.