ராணிப்பேட்டை சாலை விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை சாலை விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி
ராணிப்பேட்டை சாலை விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நேற்று (1.8.2022) மாலை 5 மணியளவில், சோளிங்கர் – அரக்கோணம் சாலை, எஸ்ஆர் கண்டிகை மின்னலம்மாள் கோவில் எதிரே சாலையோரம் நின்றிருந்த புதூர் கண்டிகையைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 45) மற்றும் அங்கு சாலையில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த எஸ்ஆர் கண்டிகை கிராமத்தை சேர்ந்த உண்ணாமலை (வயது 45), கன்னியப்பன் (வயது 65) ஆகியோர் மீது அவ்வழியாக சென்ற கார் எதிர்பாராத விதமாக மோதியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூபாய் இரண்டு இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com