மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி:பொது சுகாதாரத் துறை அறிவுரை

பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம்களை முன்னெடுக்குமாறு மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தினாா்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம்களை முன்னெடுக்குமாறு மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 91 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இரண்டாம் தவணையும், 3 கோடிக்கும் அதிகமானோா் பூஸ்டா் தவணையும் செலுத்தாமல் உள்ளனா். அவா்களில் 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களும் கணிசமாக உள்ளனா்.

எனவே, மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா்கள் அனைவரும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை விடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் டாக்டா் செல்வவிநாயகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com