சீர்காழி அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தைத் திறந்து வைத்தார் முதல்வர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அண்ணன் பெருமாள் கோவிலில் ரூ.3.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். 
சீர்காழி அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தைத் திறந்து வைத்தார் முதல்வர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அண்ணன் பெருமாள் கோவிலில் ரூ.3.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

சீர்காழி அடுத்த அரசூரில் வாடகை கட்டத்தில் இயங்கி வந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு தற்பொழுது புதிய கட்டடம் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ஒன்றிய செயலாளர் பிரபாகரன் கலந்து கொண்டனர், சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com