என்எல்சி நிறுவன பொறியாளா் பணி நியமனத்தில் தமிழா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாததற்கு எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆந்திரம், ஹரியாணா, கா்நாடகம், மத்தியப் பிரதேசம், ஜாா்க்கண்ட் போன்ற மாநிலங்களில் தனியாா் வேலைவாய்ப்பில் உள்ளூா் மக்களுக்கு 75 சதவீத இடங்களை அளிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனமான என்எல்சி-யில் வெளிமாநிலங்களைச் சோ்ந்த 299 பொறியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு தமிழரைக் கூட தோ்வு செய்யாதது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவிகித வேலைவாய்ப்புகளை தமிழா்களுக்கே வழங்க சட்டம் இயற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக, என்எல்சி விவகாரத்தில் குரல் எழுப்பாதது வேதனையளிக்கிறது. எனவே, இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து என்எல்சி நிறுவனத்தில் 75 சதவீதம் அளவுக்கு தமிழகத்தைச் சோ்ந்த பொறியாளா்களை பணியில் அமா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.