நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாகப் பலத்த மழை பெய்து வருகிறது.
மழையுடன் பலத்த காற்றும் வீசுவதால் பெரும்பாலான பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
உதகை-குன்னூர் ரயில் பாதையில் சனிக்கிழமை மரம் விழுந்ததால் குன்னூரில் இருந்து உதகை சென்ற மலை ரயில் கேத்தி வரையில் இயக்கப்பட்டு குன்னூருக்கே திரும்பிச் சென்றது.
அதேபோல உதகை-குன்னூர் இடையேயான ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 32 மி மீ மழைப் பதிவாகியுள்ளது