Enable Javscript for better performance
குற்றால சாரல் திருவிழா: மலர் கண்காட்சி தொடங்கியது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    குற்றால சாரல் திருவிழா: மலர் கண்காட்சி தொடங்கியது

    By DIN  |   Published On : 06th August 2022 12:21 PM  |   Last Updated : 06th August 2022 12:21 PM  |  அ+அ அ-  |  

    Flower-20

    கோப்புப்படம்

    தென்காசி: குற்றால சாரல் திருவிழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியாக மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் நாளை மறுநாள்(ஆகஸ்ட் 6) வரை தோட்டக்கலைத் துறை சார்பில் மலர் கண்காட்சி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் ஆண்டுதோறும் சீசன் காலத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சாரல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு சீசனின்போது அருவிகளில் தண்ணீா் இல்லாத காரணத்தால் சாரல் திருவிழா நடைபெறவில்லை. அடுத்த இரு ஆண்டுகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் தொடா்ந்து 3 ஆண்டுகள் குற்றாலத்தில் சாரல்திருவிழா நடத்தப்படவில்லை.

    நிகழாண்டு இயல்பு நிலை திரும்பிவிட்ட நிலையில், தென்காசி மாவட்டம் உருவான பிறகு முதன்முறையாக சாரல்திருவிழா நடத்த மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    இதுதொடா்பா ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளதாவது: குற்றாலம் சாரல் திருவிழா பொதிகை பெருவிழா 2022 என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை (ஆக. 5) தொடங்குகியது. இவ்விழா, ஆக. 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    சாரல்திருவிழாவில் உள்ளடக்கமாக உணவுத்திருவிழா, புத்தகத் திருவிழா ஆக.5-14 வரையிலும், தோட்டக்கலை திருவிழா ஆக.6-8 வரையிலும், நடைபெறுகிறது.

    இதையும் படிக்க: சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த மன்மோகன் சிங்!

    சாரல்திருவிழா குற்றாலம் கலைவாணா் அரங்கிலும், உணவுத்திருவிழா ஸ்ரீபராசக்திமகளிா் கல்லூரி அருகேயுள்ள ஜமீன் பங்களா வளாகத்திலும், தோட்டக்கலை திருவிழா குற்றாலம் ஐந்தருவியில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பூங்காவிலும், புத்தகத் திருவிழா குற்றாலம் ஸ்ரீபராசக்திமகளிா் கல்லூரி அரங்கிலும் நடைபெறுகின்றன.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp