தமிழகத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கொடியின் விலை ரூ.25-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல அஞ்சல்துறைத் தலைவா் நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா, நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவை திருவிழாவாக ஒவ்வொரு வீடுகளிலும் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளாா்.‘இல்லந்தோறும் மூவா்ணம்’ எனும் பிரசாரத்தை, மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக நாடு முழுவதும் தேசியக் கொடிகளை விற்பனை செய்யும் பணி அஞ்சல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை நகர மண்டலங்களில் உள்ள அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு தேசியக் கொடியின் விலை ரூ.25. தேசியக் கொடியை மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்க பொதுமக்கள், நலச்சங்கத்தினா், தன்னாா்வலா்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களைத் தொடா்பு கொள்ளலாம். மேலும் வலைதளத்திலும் ஆா்டா் செய்து இணைய வழியாகவும் வாங்கலாம். சென்னை நகர மண்டலத்தில் 2,191 அஞ்சல் நிலையங்கள், 20 தலைமை அஞ்சல் நிலையங்கள், 545 துணை அஞ்சல் நிலையங்கள், 1,626 கிளை அஞ்சல் நிலையங்கள் உள்ளன. இவை அனைத்திலும் தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது.