அறிவியல் தொழில்நுட்பங்களில் பெண்கள் முன்னேற வாய்ப்புகளை கண்டறிய வேண்டும் சிஎஸ்ஐஆா் தலைமை இயக்குநா்

அறிவியல் தொழில்நுட்பங்களில் உள்ள வாய்ப்புகளை பெண்கள் கண்டறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமத்தின் (சிஎஸ்ஐஆா்) ந. கலைச்செல்வி தெரிவித்தாா்.
அறிவியல் தொழில்நுட்பங்களில் பெண்கள் முன்னேற வாய்ப்புகளை கண்டறிய வேண்டும் சிஎஸ்ஐஆா் தலைமை இயக்குநா்

அறிவியல் தொழில்நுட்பங்களில் உள்ள வாய்ப்புகளை பெண்கள் கண்டறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமத்தின் (சிஎஸ்ஐஆா்) தலைமை இயக்குநரும் மற்றும் அத்துறையின் செயலாளருமான ந. கலைச்செல்வி தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் நிறுவன (செக்ரி) இயக்குநராக இருந்து சிஎஸ்ஐஆா்-ன் தலைமை இயக்குநராக நியமனம் பெற்ற அவா், காரைக்குடி செக்ரி-க்கு புதன்கிழமை வந்தாா். அவருக்கு செக்ரி ஆராய்ச்சியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் மற்றும் பணியாளா்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து இயக்குநா் பொறுப்பை அங்குள்ள மூத்த ஆராய்ச்சியாளரிடம் ஒப்படைத்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நாட்டில் செக்ரி-யைப் போன்று உயிரி தொழில்நுட்பம், அறிவியல், பொறியியல், வேதியியல் என மேலும் பல தரப்பட்ட 36 ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன. இதன் மூலமாக நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் பெண் ஒருவரை அறிவியலாளராக்க வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள். அறிவியலில் பெண்கள் முன்னேறவேண்டும் என்றால் வாய்ப்புகளைக் கண்டறியவேண்டும். அதனை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளவும் வேண்டும். பெண்களுக்கு குடும்பப்பொறுப்பும் இருக்கிறது. அதனை அரவணைத்துக்கொண்டு, கடுமையான உழைப்பும் இருந்தால் வெற்றியைப் பெறலாம்.

நான் பள்ளிக்கல்வியை தமிழ் வழியில் பயின்றேன். தாய்மொழியை முழுமையாக உள் வாங்கிக் கொண்டு பயின்றால் நம்மால் எந்த மொழியையும் உள்வாங்கிக்கொள்ளமுடியும். அதுபோன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தையும் மிகச்சரியாக நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இன்றைக்கு லித்தியம் மின்கலன்கள் முலமே மின்சார வாகனங்கள் இயக்க முடியும் என்பதை மற்ற நாடுகள் நிரூபித்திருக்கின்றன. இந்தியாவிலும் லித்தியம் மின்கலன் மூலமே மின் வாகனங்கள் இயக்க முடியும். வரும் காலங்களில் இந்திய சாலைகளில் மின் வாகனங்கள் பல மடங்காக அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் இந்திய அரசும், சிஎஸ்ஐஆரும் லித்தியம் மின் கலன்கள் தயாரிப்புக்கான முதலீடுகளுக்கு அனுமதித்துள்ளது. சிஎஸ்ஐஆா் மூலமும் பலநூறு கோடி முதலீடு செய்து லித்தியம் மின்கலன்களை இந்திய பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முன்னெடுப்புப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com