தமிழகத்தில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.
போதைப்பொருள் விழிப்புணர்வு நாளாக இன்று அனுசரிக்கப்படும் நிலையில், சென்னையில் போதைப் பொருள்களுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கும் முதல்வர் ஸ்டாலின், பிரசாரத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.
முன்னதாக, சென்னையில் நேற்று காலை மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்ட போதைப்பொருள் தடுப்பு மாநாட்டிற்கு தலைமை தாங்கிய முதல்வர் ஸ்டாலின், பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.