மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை தணிந்து வருவதால் வெள்ளிக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,20,000 கன அடியிலிருந்து 95,000 கன அடியாக சரிந்தது.
வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 95,000 கன அடியாக சரிந்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 95,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 72,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருந்தது.